December 09, 2010

அகத்துள் அகவை

கண்ணை மூடி
தூங்குங்க தாத்தா-

November 21, 2010

ஆதி அண்டமும் அரைவேக்காட்டு முட்டையும்

அடிகாணா தாழியொன்றை
வெள்ளிக்கரங்கள் கடைய
கருகருவென வெண்ணை திரண்டெழுந்த
ஒரு ஞாயிறு மதியம்.

October 18, 2010

சலனம்



நீர்ப்பரப்பு.
துளிநீர் விழ
குழித்து விழுங்கும்.

October 15, 2010

மோதல்



கொல்லையில்
நின்றபடி தங்கை

October 10, 2010

ஸ்வாசத்தில் இருத்தல்

மனப் பரப்பில்
மண்துகள்களாய் விரவிக் கிடக்கிறது வெறுமை.
ஒன்றுவிடாமல் பொறுக்கி
ஒரு குடுவையில் அடைத்து
விதியின் கடலுள் வீசியெறிந்தேன்.
அலையடித்து
கரை திரும்பியது குடுவை.

October 07, 2010

க் கவிதை

க்கொன்று
என் சிந்தையுள் நுழைந்தது.

காற்றொடு கலப்பேன்

இருட்புதர்
விரவிக் கிடக்கும்
வனம்.

எழுத்தாளர் மரித்துவிடுகிறார்

நீர்மீது
நடந்து சென்றது
காற்று.

October 01, 2010

September 30, 2010

தூதொடு வந்த மழை


மூச்சு முட்ட
நான் இயற்றிய காதலை
மூட்டை கட்டி அனுப்பி வைக்கிறேன்;

கப்பலாய் நனைந்தே
உன் கரை சேரட்டும்.

September 25, 2010

ஊசிமுனையளவு தர்மம்



தாழப் பறந்து வந்து, தொடைமேல் அமர்ந்தது கொசு ஒன்று. அசையாமல் கிடந்தேன். மயிர்ப்புதர்களில் மாட்டிக்கொள்ளாமல், கவனமாய்க் கடந்து, தோதான இடத்தில் ராஜகம்பீரத்தொடு நின்றுகொண்டது. காலச் சூறாவளியில் டினோசர்களே அடித்துச் செல்லப்பட்டபோதிலும், பறந்து பிழைத்துக்கொண்டிருக்கும் கொசுக்கள் கில்லாடிகள்தாம். ஜீவிதச் சந்தையில் வலியன மட்டுமே விலை போகும்.

September 22, 2010

காலத்தின் கடிகாரம்



ஆதி அந்தம் அறியவொண்ணாது
நீளும் ஒரு பெருஞ்சுவர்.

சர்வாதிகாரக் காதலி



இதுவே இறுதியாய், ஒருமுறை சிணுங்கி அடங்கியது, தரைபட்டு உடைந்து சிதறிய காற்றிசைச்சரம்.

September 18, 2010

சாரி சார்!

Ingate வழியாக ஆஸ்பிடல் வளாகத்திலிருந்து பைக்கில் வெளியேறினேன். எதிர்ப்புறம் நுழைந்த இன்னொரு பைக்கை எதிர்பாராது மோதப்போய், பிரேக்கை மிதித்து தடுமாறும்போது,

September 15, 2010

தூதொடு வந்த மழை


உன்னை
தீண்டித் தழுவிய தேகத்தில்
இன்னும் ஒட்டியிருக்கிறது
மலர்ந்த பெண் வாசனை

September 10, 2010

August 30, 2010

தமிழ்க் கணக்கு



கூட்டலும் பெருக்கலும்
கணிதத்தின் அடிப்படை இயக்கங்களாம்.

உயிர் மெய் எழுத்து

August 29, 2010

கணக்கு



அறையை கூட்டிப் பெருக்கி
சிறுநீர் கழித்துவிட்டு
வந்தமர்ந்தேன்.

August 28, 2010

தூதொடு வந்த மழை




ஆநிரை இரையும்  ஒலிகேட்டு- மலையிடை
மேவும் மேகத் துளிபட்டு- துடியிடை
மயிலும் அகவ -ஒளிகெட்டு வடிவிடை
அழகும் துயில் எழும்.

August 27, 2010

தூதொடு வந்த மழை

கல்லும் கலையும்

கல்லெனக் கண்டாரும் கலையிலே கரைகண்டால்கல்லும் கரைந்து குழைந்திடாதோ- இலையெனில்
கொண்ட கலையில் உண்டு பிழையோ?
கலையில் பிழையிலை; கரையின் குறைகளை.

August 24, 2010

தூதொடு வந்த மழை



*மிகுவெப்பமோ குறைஅழுத்தமோ
மழை பெய்வதற்கும்
காரண காரியங்கள் உண்டு.

August 21, 2010

ஆற்றுப்பெருக்கெடுத்து

ஆற்றுப் பரப்பில் பறந்து திரிந்தேன்.

விதியுடைத்து...



உயிர்மேல் ஒட்டி வரலாது
மெய்மீதே ஒட்டி உறவாவேன்.

அருவியின்கீழ்

வெண்ணீர்ச் சங்கிலிகள் தலையில்பட்டுத் தெறித்ததும்
வெந்நீர் ஒடையொன்று தொடையிடுக்கில் வழிந்தது.

August 19, 2010

குறுஞ்செய்தி

எஸ் செம் மெஸ்ஸில் வந்தது:
Walk as if you are the King
OR
Walk as if you dont care whoever the King is.

August 18, 2010

அளவு சாப்பாடு



தெரிந்த நபருக்கு
தொண்டைவலி என்றும்
மறுநாள் அழைத்து வரலாமா
என்று கேட்டபடியே
நண்பகலுண்டி பரிமாறினார் டீமாஸ்டர். 

August 17, 2010

உள் குரல்


http://manisson.blogspot.com/2010/08/blog-post_15.html

காற்றிசைச்சரத்தோடு வார்த்தை வேட்டை நிறைவுற்றதாய் எழுதியபோதும், தொங்குமணிச்சரம் தரும் காட்சிக் கிளர்ச்சி, காற்றிசைச்சரத்தில் இல்லையென்றே பிற்பாடு பட்டது. மீண்டும் கிளர்ந்தெழுந்துவிட்டது வார்த்தை வேட்கை.

एकं

एकहीछतरीकीनीचेखड़जावमेरेप्यारेअक्षरों ।

August 16, 2010

बूँदे से बातें



चिंता क्रोध निराशा
जो भी हो मनोदशा
मोती बूँदे गिरते समय
बादलों में बुद्धि उड जाय
बार बार तो वर्षा
क्यों न होता हमेशा?

August 15, 2010

தூதொடு வந்த மழை










வழியெங்கும்
வழிந்தோடுகிறது மழை
வேடிக்கைபார்ப்போர்
யாருமின்றி...

காற்றிசைச்சரம்

காற்றிலசையும் WIND CHIMES ஒரு காட்சிக்கவிதை; பலகோடிக் காவியம். ரசனை ஒதுக்கி, ராசாயனத்தை ஆராய்ந்தால்-
CHIMES என்ற வார்த்தை " A RINGING SOUND, ESPECIALLY, ONE THAT IS MADE BY A BELL" என்று NOUN ஆகவும், "TO RING " என்று VERB ஆகவும் பயன்பாட்டில் உள்ளது.

August 10, 2010

நான் உத்தமனில்லை



பரிசுத்தம் உறநான் விழைகையில்
படுகுத்தம் நிறையவே அறிகிறேன்;

August 08, 2010

விழி மூடாதிருந்தால்

விழிமூடா திருந்தால் கனவில் நிகழ்ந்தது
விளங்கியிருப்பேன்
விழிமூடியே யிருந்தால் கனவை நிகழ்த்தியது
விளக்கியிருப்பேன்.

http://manisson.blogspot.com/2010/07/blog-post_5215.html

( விளங்கியிருப்பேன்-விளக்கியிருப்பேன் என்று வார்த்தையில் விளையாடியிருந்தாலும், கனா விசாரங்களில் எனக்கு ஞானமில்லை என்பதே உண்மை. )

August 06, 2010

உள் அன்பு

கண்களுக்குப் புலப்படாத கயிற்றால் ஏதாவதொன்றோடு பிணைத்துக்கொள்ளவே என் மனம் விழைகிறது.

உள்ளேயுற்ற பற்றாக்குறையை, வெளியே பற்றி நிறைவாக்கிக்கொள்ள முற்படுகிறது. அந்தக் குறைபற்று, என்மீதே இல்லாமல் போன அன்பாக இருக்கக்கூடும். வாழ்தலில் வெறுப்பும், சக மனிதர்மீதான காழ்ப்பும் உள்ளன்பில்லாததின் வெளிப்பாடாக இருக்கலாம்.

August 03, 2010

நிரபராதம்

சால்ஜாப்புகள் நிறைந்ததாய் இருக்கிறது ஜீவிதம்.

செய்த தவறுகளை ஒப்புக்கொள்ள மேதகு. அகங்காரம் தயாராய் இருப்பதில்லை. ஒப்புக்கொண்டால் உள்ளேயுறும் தற்காலிக சலனத்தை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. சலனத்தை உற்றாய்ந்தால் பரிசுத்தமுறவும் நேரலாம். அதற்கு வாய்ப்பளிக்காமல், சுயவிசாரணையின் முடிவில் சாதகமாகவே தீர்ப்பெழுதப்படுகிறது, குற்றங்களை நியாயப்படுத்தியோ அல்லது ஒப்பீடு செய்து குற்றங்களை சிறியதாக்கிக்கொண்டோ.

என்ன செய்வது? குற்ற உணர்ச்சியின் குறுகுறுப்போடும், சின்னச் சின்ன சால்ஜாப்புகள் செய்து, சமாதானமாகவும் தான் நிகழ்த்த வேண்டியிருக்கிறது வாழ்க்கையை.


நமக்கென்று
ஒரு கடிகாரம் வைத்திருக்கின்றோம்

அது காட்டும் நேரம் மட்டுமே
சரியென்று நம்புவதற்கு.

ஆணவம் கொள்

ஒற்றைக்கரம் இழந்தோர் இருகாலற்றவரைக் கண்டு ஆறுதல்கொண்டால், உறுப்புகள் உருப்படியாய் இருந்தும் மாமிசப்பிண்டமென மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் நரம்புநோயாளிகள் எவரிடமிருந்து ஆறுதல் பெறுவார்?

கடன்பட்டு குடித்தனம் செய்பவர் குடிசைவாழ்பவரைப் பார்த்து சமாதானம் கொண்டால் உண்டியுடுக்கையுறைவிடம் அற்ற அகதிகளை யார் சமாதானம் செய்வது?

ஒவ்வொரு உயிருக்கென்றும் ஒரு தனிச் சிறப்பு இருக்கக்கூடும். தனித்துவம் பெற்றதற்காக (வேண்டுமானால்) ஆணவம் கொள்ளலாம்.

தோற்ற மயக்கங்கள்
மேதா விலாசங்கள்
காசு கௌரவங்கள்

இன்னபிற நீங்கியும் -

ஆணவம் கொள்
நீ நீயாய் இருப்பதற்கு!

August 02, 2010

ரண்டக்க கவிஞர் ராஜா

மெட்டு: ARR ன் Airtel Tone
பாட்டு:

தேடும் கண்கள் எங்கேயோ பார்த்த பெண்ணைத்தான்
தேனிதழ் நீரோ மழைத்துளி தானோ
தெறிக்குது அருகே பேசுற கணம்
விழி குக்குறு குறு குக்குறு குறு
நோக்கியதோ.

மெட்டு: இளைய ராஜாவின் தென்பாண்டி சீமையிலே
பாட்டு: 1

மழை பேஞ்ச ஈரத்தில
மண் மேல வெரலிழுத்து
மனம் போல கிறுக்கியவ
பேரறிவாயோ ஊரறிவாயோ


இனிமேல் அவளை காண்பாயோ
கண்டால் எனக்கு சொல்வாயோ
மழையும் ஒருநாள் பொழியாதோ
மனசும் அதிலே நனையாதோ


பாட்டு: 2

சும்மாடு தலையில் வெச்சு
கருவாடு சுமக்கிறவ
தெருவோடு நடக்கையிலே
வீசுற வாசம் மல்லிகை வாசம்.

பாரா முகமா ஏன் போறே
காசா பணமா நான் தாரேன்
நீதான் எனக்கு சரி ஜோடி
ஊரு கிடக்கு அடி போடி.

மெட்டு: இளைய ராஜாவின் NOTHING BUT WIND
பாட்டு:

ஈரம் விழிகளில் வழியுது
கடும்பாறை நெஞ்சமிது கரையுது

மழைமேகம் நீலவானம் எனக்கானதே இனி
நெடுந்தூரம் போகவேணும் விளக்காகுமே விழி.

வலிக்காமல் பிரிகிறேன் வருகிறேன்.

குரு வணக்கம்

விளை நிலமென விளங்கி னேனெனிலும்
துளி ஈரமென பொழிந்த வானமே!
வானின்றி விளைந்த நிலமுண்டோ?
வான்நின்று வாழ்த்துவீர் எமையே!

August 01, 2010

முதல் கவிதை



பள்ளிப் பறவை


நானொரு பள்ளிப் பறவை
என் சிறகில் ஒரு கறை

( ஆறாம் வகுப்பில் கவிதை போட்டிக்காக எழுதியது. இரண்டு வரிகளைத் தாண்டி என் கற்பனை வரிக்குதிரை ஓடாது நொண்டியடித்து நின்றது. )

கோலங்கள்



அடர்பனி மார்கழி இரவில்
சுடர்விழியாள் தண்ணீர் தெளித்து
வாசலில் இயற்றிய கோலாகலம்
சங்க இலக்கியம்.

மஞ்சள் பூசிய முகத்தில்
வியர்வை வைத்த புள்ளிகளில்
நெற்றிமுடி ஆடும் கோலம்
புதுக் கவிதை.

ஒரு புள்ளி
ஒரு வரிசை எனினும்
விஜயலட்சுமி- ஹை கூ

பார்வைகள் பரிமாறும்போது
ரகசியமாய் நான் வைத்த புள்ளிகளில்
ரசல் போடும் கடலை
அலங்கோலம்.

( விஜயலட்சுமிக்கு நான் one way ல் பாதை போட்டுக் கொண்டிருக்கையில் நண்பன் ரசல் by- pass ல் குறுக்கிட்டான். )

July 31, 2010

பசுபதி வேணு வசந்தம்



செங்கதி ரோனம் புலிமுகிலி ழந்த
அந்தி வானம் - துகிலி ழந்த
திரௌபதி மானம்- என்சனி இழந்தது
பசுபதி வேணு வசந்தம்.

பிசகு


என் வழி எங்கும்
குழி தோண்டி வைத்திருந்தது காதல்.

விழிமூடாதிருந்தால்



நெகிழ்ந்துபோய் நாயகன் நின்றிருந்தான்.

July 29, 2010

இயல்பென இருத்தல்

மறுவினையாற்றாமல், மனதை உற்றுப் பார்க்கும் பொழுதுகளில் எண்ணங்களின் ரகம் காண முடிகிறது; தெள்ளமும் கள்ளமுமாய் வந்துபோய்க் கொண்டுதானிருக்கின்றன.

July 28, 2010

சனி உறவாடு



சொல்லுரைத்துக் கழிந்த சனியிரவுகளில்
புல்லரித்த நேசமழையின் நினைவுக்குட்டையில்
கல்லிறைத்துக் காத்திருக்கிறது
நெல்லரைத்துப் பரிமாறும் உண்டியகப் பாதை.

July 27, 2010

இன்னுமா திருந்தல?



செருப்படிகள் வாங்குதல்
எனக்கு சகஜம்.

நுண்மாண்கவி

வார்த்தைக்குள்
கட்டுண்டு கிடக்குது
வாழ்க்கை.

July 23, 2010

ஆணவம் கொள்

தோற்ற மயக்கங்கள்
காசு கௌரவங்கள்
மேதா விலாசங்கள்

சிரித்துச் சிரித்து



இதயம் கீறிவிட்டு
சிரிப்புத் துண்டை எறிந்துவிட்டு போகிறவளே!

காலங் கடத்த காதல்


குறும்புப் பார்வைகளும்
சில்மிஷ தீண்டல்களும்
சின்ன சண்டைகளும்
தேனொழுகும் வார்த்தைகளுமாய் -

சிறைக்குள் சுனாமி



காலியானதை அகற்றிவிட்டு
நிரம்பியிருந்ததை
கவிழ்த்துவிட்டுப் போனான் கடைப் பையன்.

பெயர் சொல்



அம்மா அப்பா இட்டபெயர் ராஜசேகர்
ஜெயந்தி மிஸ் இடிச்சதில் மிஞ்சியது ராஜா.

காதல் அந்தாதி



ஈரத் துணிகள் காய வைக்கையில்
ஓரப்பார்வை காதல் சேதி சொல்லும்
மாத மொருமுறை துவைக்கின்ற பாய்
மாத விலக்கான தேதி சொல்லும்.

நரை காதல்



ஆர்ப்பாட்டம் அடங்கி ஆரவாரம் குறையும்
நரை கூடி கிழப்பருவம் எய்தி
தானும் ஆட தசையும் ஆடும்;
நின்ற வேளையில் ஊன்றுகோல் நீ!

July 22, 2010

உள்செய்

செய்யுள்:1

இண்டு இடுக்குகளில் ஒண்டி ஒதுங்கும்
வண்டி நெருக்கத்தில் மனசு புழுங்கும்
ஏசி காரிலும் ஏழை மனம் ஏங்கும்;
நடந்து வந்திருந்தால் கடந்து சென்றிருக்கலாமோ?

July 20, 2010

உள் கட

பூட்டிக் கிடக்கும் மனதைத் திறந்துவிடுவதற்கான சாவியை வைத்திருக்கின்றன சில கணங்கள். நேசம் பரிமாறிக்கொள்ளும் நேரங்கள், லயித்துக்கிடக்கும் இசை, இன்ன பிற இடங்களில் ஒரு மர்மக் கதவு தட்டப்பட்டுவிடுகிறது.

July 15, 2010

நண்பர்கள் இல்லாத அறையில்

..................................................................
வெற்றிடங்களை நிரப்பியிருக்கின்றன
நேசமும் நட்பும்.

July 14, 2010

நட்பில் தழும்பிய நிறைகுடம்



பாதி நிரம்பிய தண்ணீர் பாட்டிலை
குடிக்கக் கொடுத்தான் நண்பன் வேணு .

கூத்தாடிய குறைகுடுவையை நிரப்பியிருந்தது
ஒரு பரிசுத்தமான அன்பு.

July 13, 2010

தீதும் நன்றும்

பொதுக்கழிப்பிடங்களில் சிறுநீர் கழித்தபிறகு, கழிவுநீர்மீது காறி உமிழ்ந்துவிட்டு நகர்பவர்களைப்பார்த்திருக்கிறேன் ; அவர்களுள் ஒருவனாகவும் இருந்திருக்கிறேன் .தெறிக்கும் சிறுநீரில் ஒரு துளி நாவில் சுவைக்கப்பட்டதாய் ஒரு பிரம்மைச் சிந்தனையின் வினையாக்கமாய் இருக்கக்கூடுமோ அந்த உமிழ்தல்? ஒரு நுண்கணத்தில், பிரக்ஞைக்குப் புலப்படாமல் உருவாகி, செயலாகிய இந்தச் சிந்தனையின் அருவருப்பு திடுக்கிடலில் உறையச்செய்கிறது.

July 08, 2010

படிப்பிதம்

அழுத்திப் பூசிய அழுக்கும், பராமரிப்பில்லாத சரீரமாய் இவர்களைப்  பார்த்திருக்கிறேன் . பொதுவான இடங்களில், பிரத்யேகமான உலகங்களை சிருஷ்டித்துக்கொண்டு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருப்பார்கள். பிரபஞ்சப் பெரும்புதிரை விடுவிக்கும் தீவிர சிந்தனையோடு வெறித்துப் பார்த்தபடியும், எள்ளி நகையாட ஒரு பெருங்கோமாளிஎன உலகத்தைப் பார்த்து அசட்டுத்தனமாய் சிரித்தபடியும் பார்வையில் பதியும் இவர்கள், மக்கள் தொகையில் விடுபட்ட எண்ணிக்கைகளோ . விதிஎனத் தீர்மானிக்கப்பட்ட கணத்தில் கவனந்தவறி, தடுக்கி விழுந்தவர்களோ ; விழுந்த பின் எழமுடியாமல் நின்றுவிட்டவர்களோ.

July 07, 2010

கண் காட்சி



இதழ்கள் உரசி
இடைகள் அணைத்து
மார்பு முட்டி களித்திருக்கும்
நகரக் காதல்.


July 06, 2010

நண்பர்களைப் பிரிந்த இரவு




மூடிய புத்தகத்தின் மௌனம்
போர்த்திய அறையில்
சிநேஹித்திருந்த தருணங்களை
மீட்டிக் கொண்டிருக்கிறேன்.

உச்சுக்கொட்டி கேட்கிறது
சுவர்க் கடிகாரம்.

July 02, 2010

ரயில் சினேஹம்



உன்னோடு
நான் செய்த உறவு

July 01, 2010

பழம்பெரும் பழங்கள்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடிகளைக் கெடுத்தன சில பழங்கள். ஏதேன் தோட்டத்தில் அம்மணமாய்த் திரிந்து கொண்டிருந்த ஏவாளை அம்மாவாக்கியது ஒரு ஆப்பிள். கருவுற்று, குழந்தைகள் ஈன்று சீரழிந்த கதைகள் தேவாலயங்களின் ஞாயிற்றுக்கிழமை
நற்செய்திகள். ஹவ்வா என்று பெயர் மட்டும்தான் வேறு. மற்றபடி திருக்குரானின் ஹதீத்துகளில் அதே பழம். அதே பிரச்சனைகள். சிவனேன்னு இருந்த பரமேஸ்வரன்- பார்வதி குடும்பத்தில் மாம்பழம் ஒன்று குண்டு வைத்தது. எலியோடும் மயிலோடும் விளையாடிக்கொண்டிருந்த வினாயக-முருகன் பிரதர்ஸ் எலியும் பூனையுமாய் முறைத்துக்கொண்ட திருவிளையாடல்கள் சினிமா பிரசித்தம். எட்டாத உயரத்தில் பழுத்திருந்த திராட்சைப் பழங்கள் இன்று வரைக்கும் நரிவம்சத்தினருக்கு புளிக்கும்பழம் தான்.

சனிக்கிழமை இரவுகள்

சனிக்கிழமை இரவுகள் சுவாரசியமானவை. வாரத்துவக்கத்திற்கான படபடப்பு முன்னோட்டம் ஞாயிறு போல் சனியிரவில் இருப்பதில்லை. மூச்சிரைத்தோடும் வருடத்தின் வாரங்களெல்லாம் சனிக்கிழமை இரவுகளில் சாவகாசமாய் இளைப்பாறும். தேக அயர்ச்சியும் உள்ளத்துளைச்சலும் சனி இரவின் தோள்களில் தாராளமாய் இறக்கிவைக்கப்படுகின்றன. சனிக்கிழமை இரவென்பது தோழமை. ஒரு வாரத்திற்கு தேவையான அன்பு சனியிரவுகளில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டுவிடுகிறது. நேசிப்பிற்குரியவர்க்கான பாசத்தையும் நேரத்தையும் ஒதுக்கமுடியாத குடும்பஸ்த்தர்க்கு சனிக்கிழமை இரவென்பது பகிர்வுவெளி.

தனித்திருப்பவனுக்கு எல்லா இரவுகளுமே விசேஷமானவை . இரவு என்பது அவனுக்கு தேவதையின் ஆசிர்வாதம். கருஞ்சிறகுகளில் சுமந்தபடியே இரவுதேவதை தனது அந்தரங்க அற்புதங்களை அவனுக்கு தினந்தோறும் ஆசிர்வாதம் செய்துவிடுகிறாள். கோலாகலமாகவே துவங்குகின்றது ஒரு மாநகரத்தின் இரவு. ஒரு குழந்தை அண்ணாந்து வாய் பிளப்பதற்கான மாயாஜாலங்களை அது வாரியிறைத்து விடுகிறது. இங்கே இரவு எனப்படுவது சூரியன் இல்லாத வெளிச்சம். ஒற்றைக்கால் ரெட்டைக்கண்களோடு பயமுறுத்தும் அரக்கனாய் நெடிதுயர்ந்த சோடியம் விளக்குகளும் பரபரப்பு குறையாத சாலைகளும் மாநகரின் ராத்திரிகளை விடிய விடிய விழித்திருக்க வைத்துவிடுகின்றன.

எதையோ துரத்தியபடிதான் விரைகின்றன எல்லா வாகனங்களும். அசுரவேக வாகனங்களெல்லாம் விலங்குகளை ஒத்தே இருக்கின்றன.ஒரு மலைப்பாம்பென ஊர்ந்து வருகிறது பாலத்தின் மேல் பறக்கும் ரயில். ஒற்றைக்கண் மட்டுமே கொண்ட காட்டுவண்டென பறக்கின்றன இரு சக்கர வண்டிகள். முன்பக்கம் மூக்குபோல் புடைத்த ஆட்டோ ஓணாயென ஓடி வருகுது . சிங்கமோ புலியோஎன பீதிகிளப்புகிறது லாரி. சற்றே நீளமான கார்கள் காட்டெருமைகள் போலவே வருகின்றன. ஒடிசலான தேகமுடய சைக்கிள் மட்டும் சாதுவான எறும்புபோல ஊர்ந்து வருகிறது. முட்டைக்கண்ணும் பரட்டைத்தலையும் மயிர் மழிக்காத முகமுமாய் அந்த சைக்கிளோட்டிதான் எரும்புமேல் எமனாய் பயமுறுத்துகின்றான்.

நாம் வடிவமைத்த வாகனங்கள் எல்லாம் விலங்கினங்களையே நினைவூட்டுகின்றன. முதுகுத்தண்டு நிமிர்ந்து வாலுதிர்த்து வெகு தொலைவு கடந்து வந்திருந்தாலும் மனிதனின் ஞாபகக் கண்ணாடி எங்கும் விலங்கின் பிம்பங்கள். முற்றிலுமாய் மிருகத்தின் அடையாளங்களை மனிதன் துடைத்தெறிவது எக்காலம்? விலங்கின் எச்சங்கள் எல்லாம் களைந்த மனிதன் என்னவாயிருப்பான்? கடவுள் எனச்சொல்லப்பட்டது மனிதனின் அடுத்த பரிணாமமா அல்லது ஞானமுற்றவரின் அனுபவமாய் அறியப்பட்டது போல் உயிருற்பத்தி ஆகும் ஊற்றுக்கண்ணா?

தடம் புரண்ட சிந்தனைகள் விடைகாணா முற்றுச்சுவரின் மீது முட்டிக்கொண்டு நின்றதில் தலைகனத்து புரண்டுபடுத்தேன். என் படுக்கையருகே என்னைப் போலவே ஒரு கரிய உருவம் உருண்டது; விக்கித்து விழித்தேன். என்னிழல்தான் என ஆறறிவு உறுத்தியபோதும் இருதயத்தின் படபடப்பு இன்னமும் குறைந்தபாடில்லை.

மண் துகள்களோடு சிகரெட் சாம்பல்
கசங்கிய துணிகள் தாறுமாறாய் சாமான்கள்
பகலில் திருடன் நுழைந்திருப்பனோ? 


கதவு வழியாய் நுழைந்த காற்றில்
ஈரப்பசையோடு தாவர வாசனை.
கோடை மழை பெய்திருக்கக்கூடும். 

எங்கே? எப்போது? 

ஜன்னலுக்கு வெளியே-
வேட்டைக்கு செல்லும் வேகத்தில் வாகனங்கள்.
ஒன்றிரெண்டு இரையாகவும் நேரலாம்.

நாட்டு மரங்களை பிடுங்கி
நடப்பட்ட அலங்காரச் செடிகளுக்கு
கோடையிலும் சிரத்தையோடு நீர் பாய்ச்சும்
கார்பரேஷன் லாரி.

பின்னிரவின் பறக்கும் ரயிலில்
காலியாகவே இருக்கின்றன
பெரும்பான்மையான இருக்கைகள். 


இருளின் வெளிச்சமின்மையும் மீறி பளீரென்றிருந்தது
அவளின் முகமும் புன்னகையும். 


இளஞ்சூட்டில் தேநீர் குடித்தால் நன்றாய்த்தானிருக்கும். 

கட்டாய கடமைகள் ஏதும் நாளைக்கில்லை.
சற்று நீளமாகவே கழிகின்றது சனிக்கிழமை பின்னிரவு.

June 30, 2010

விழியருகில் வானம்


இழுத்து
போர்த்திக்கொள்ளமுடியாத தூரத்தில்
விரிந்திருக்கிறது வானம்.

June 28, 2010

இரத்தலினும் இறத்தல் நன்று



முன்னைப்போல் ஓடித்திரிய
என்னால் முடியவில்லை.

HIDE AND SEEK



A Drop of Mercury You are!

That Fell into My Heart

June 27, 2010

LONG LONG AGO

.........so long ago and i know it was ten years ago, when i was doing my pre-clinical year in MMC stu...dying for University examinations. On the eve of Microbiology exam,my brain was so drained of its genius that I studied just one topic and decided to seek the grace of Shri Ananda Narayanan Panicker (author of textbook of Microbiology) .

எங்கே கடவுள்

பிரபஞ்சப் பெருந்திரையில்
பல்முகங்கள் பலதினுசுகளாய்
கதாபாத்திரங்களாக்கி

அனாவசிய நீள அகலங்கள்
அவ்வப்போது நீக்கி

டைரக்டராய் எடிட்டராய்
இருந்திருக்குமோ இறந்திருக்குமோ
சிருஷ்டிகர்த்தா?