August 01, 2010

கோலங்கள்



அடர்பனி மார்கழி இரவில்
சுடர்விழியாள் தண்ணீர் தெளித்து
வாசலில் இயற்றிய கோலாகலம்
சங்க இலக்கியம்.

மஞ்சள் பூசிய முகத்தில்
வியர்வை வைத்த புள்ளிகளில்
நெற்றிமுடி ஆடும் கோலம்
புதுக் கவிதை.

ஒரு புள்ளி
ஒரு வரிசை எனினும்
விஜயலட்சுமி- ஹை கூ

பார்வைகள் பரிமாறும்போது
ரகசியமாய் நான் வைத்த புள்ளிகளில்
ரசல் போடும் கடலை
அலங்கோலம்.

( விஜயலட்சுமிக்கு நான் one way ல் பாதை போட்டுக் கொண்டிருக்கையில் நண்பன் ரசல் by- pass ல் குறுக்கிட்டான். )