August 02, 2010

ரண்டக்க கவிஞர் ராஜா

மெட்டு: ARR ன் Airtel Tone
பாட்டு:

தேடும் கண்கள் எங்கேயோ பார்த்த பெண்ணைத்தான்
தேனிதழ் நீரோ மழைத்துளி தானோ
தெறிக்குது அருகே பேசுற கணம்
விழி குக்குறு குறு குக்குறு குறு
நோக்கியதோ.

மெட்டு: இளைய ராஜாவின் தென்பாண்டி சீமையிலே
பாட்டு: 1

மழை பேஞ்ச ஈரத்தில
மண் மேல வெரலிழுத்து
மனம் போல கிறுக்கியவ
பேரறிவாயோ ஊரறிவாயோ


இனிமேல் அவளை காண்பாயோ
கண்டால் எனக்கு சொல்வாயோ
மழையும் ஒருநாள் பொழியாதோ
மனசும் அதிலே நனையாதோ


பாட்டு: 2

சும்மாடு தலையில் வெச்சு
கருவாடு சுமக்கிறவ
தெருவோடு நடக்கையிலே
வீசுற வாசம் மல்லிகை வாசம்.

பாரா முகமா ஏன் போறே
காசா பணமா நான் தாரேன்
நீதான் எனக்கு சரி ஜோடி
ஊரு கிடக்கு அடி போடி.

மெட்டு: இளைய ராஜாவின் NOTHING BUT WIND
பாட்டு:

ஈரம் விழிகளில் வழியுது
கடும்பாறை நெஞ்சமிது கரையுது

மழைமேகம் நீலவானம் எனக்கானதே இனி
நெடுந்தூரம் போகவேணும் விளக்காகுமே விழி.

வலிக்காமல் பிரிகிறேன் வருகிறேன்.