August 03, 2010

ஆணவம் கொள்

ஒற்றைக்கரம் இழந்தோர் இருகாலற்றவரைக் கண்டு ஆறுதல்கொண்டால், உறுப்புகள் உருப்படியாய் இருந்தும் மாமிசப்பிண்டமென மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் நரம்புநோயாளிகள் எவரிடமிருந்து ஆறுதல் பெறுவார்?

கடன்பட்டு குடித்தனம் செய்பவர் குடிசைவாழ்பவரைப் பார்த்து சமாதானம் கொண்டால் உண்டியுடுக்கையுறைவிடம் அற்ற அகதிகளை யார் சமாதானம் செய்வது?

ஒவ்வொரு உயிருக்கென்றும் ஒரு தனிச் சிறப்பு இருக்கக்கூடும். தனித்துவம் பெற்றதற்காக (வேண்டுமானால்) ஆணவம் கொள்ளலாம்.

தோற்ற மயக்கங்கள்
மேதா விலாசங்கள்
காசு கௌரவங்கள்

இன்னபிற நீங்கியும் -

ஆணவம் கொள்
நீ நீயாய் இருப்பதற்கு!