August 03, 2010

நிரபராதம்

சால்ஜாப்புகள் நிறைந்ததாய் இருக்கிறது ஜீவிதம்.

செய்த தவறுகளை ஒப்புக்கொள்ள மேதகு. அகங்காரம் தயாராய் இருப்பதில்லை. ஒப்புக்கொண்டால் உள்ளேயுறும் தற்காலிக சலனத்தை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. சலனத்தை உற்றாய்ந்தால் பரிசுத்தமுறவும் நேரலாம். அதற்கு வாய்ப்பளிக்காமல், சுயவிசாரணையின் முடிவில் சாதகமாகவே தீர்ப்பெழுதப்படுகிறது, குற்றங்களை நியாயப்படுத்தியோ அல்லது ஒப்பீடு செய்து குற்றங்களை சிறியதாக்கிக்கொண்டோ.

என்ன செய்வது? குற்ற உணர்ச்சியின் குறுகுறுப்போடும், சின்னச் சின்ன சால்ஜாப்புகள் செய்து, சமாதானமாகவும் தான் நிகழ்த்த வேண்டியிருக்கிறது வாழ்க்கையை.


நமக்கென்று
ஒரு கடிகாரம் வைத்திருக்கின்றோம்

அது காட்டும் நேரம் மட்டுமே
சரியென்று நம்புவதற்கு.