April 30, 2014

அஞ்சலி

ரதபதாதி சேனைகள்
விரைந்து கடக்கும்
நாற்சந்தி தெருமுனையில்

உறைவுயிர்

காய்ந்த மரத்தின்
கிளைகள் மீது
படர்கிற பார்வையில்
உயிர்த்து அசைகின்றன
உறைந்த அபிநயங்கள்.

அந்த நீலம்

மச்சுவீட்டு மதில்மீது
படரும் பசுங்கொடியில்
பூத்திருக்கும் அடர்நீலம்