July 31, 2010

பசுபதி வேணு வசந்தம்



செங்கதி ரோனம் புலிமுகிலி ழந்த
அந்தி வானம் - துகிலி ழந்த
திரௌபதி மானம்- என்சனி இழந்தது
பசுபதி வேணு வசந்தம்.

பிசகு


என் வழி எங்கும்
குழி தோண்டி வைத்திருந்தது காதல்.

விழிமூடாதிருந்தால்



நெகிழ்ந்துபோய் நாயகன் நின்றிருந்தான்.

July 29, 2010

இயல்பென இருத்தல்

மறுவினையாற்றாமல், மனதை உற்றுப் பார்க்கும் பொழுதுகளில் எண்ணங்களின் ரகம் காண முடிகிறது; தெள்ளமும் கள்ளமுமாய் வந்துபோய்க் கொண்டுதானிருக்கின்றன.

July 28, 2010

சனி உறவாடு



சொல்லுரைத்துக் கழிந்த சனியிரவுகளில்
புல்லரித்த நேசமழையின் நினைவுக்குட்டையில்
கல்லிறைத்துக் காத்திருக்கிறது
நெல்லரைத்துப் பரிமாறும் உண்டியகப் பாதை.

July 27, 2010

இன்னுமா திருந்தல?



செருப்படிகள் வாங்குதல்
எனக்கு சகஜம்.

நுண்மாண்கவி

வார்த்தைக்குள்
கட்டுண்டு கிடக்குது
வாழ்க்கை.

July 23, 2010

ஆணவம் கொள்

தோற்ற மயக்கங்கள்
காசு கௌரவங்கள்
மேதா விலாசங்கள்

சிரித்துச் சிரித்து



இதயம் கீறிவிட்டு
சிரிப்புத் துண்டை எறிந்துவிட்டு போகிறவளே!

காலங் கடத்த காதல்


குறும்புப் பார்வைகளும்
சில்மிஷ தீண்டல்களும்
சின்ன சண்டைகளும்
தேனொழுகும் வார்த்தைகளுமாய் -

சிறைக்குள் சுனாமி



காலியானதை அகற்றிவிட்டு
நிரம்பியிருந்ததை
கவிழ்த்துவிட்டுப் போனான் கடைப் பையன்.

பெயர் சொல்



அம்மா அப்பா இட்டபெயர் ராஜசேகர்
ஜெயந்தி மிஸ் இடிச்சதில் மிஞ்சியது ராஜா.

காதல் அந்தாதி



ஈரத் துணிகள் காய வைக்கையில்
ஓரப்பார்வை காதல் சேதி சொல்லும்
மாத மொருமுறை துவைக்கின்ற பாய்
மாத விலக்கான தேதி சொல்லும்.

நரை காதல்



ஆர்ப்பாட்டம் அடங்கி ஆரவாரம் குறையும்
நரை கூடி கிழப்பருவம் எய்தி
தானும் ஆட தசையும் ஆடும்;
நின்ற வேளையில் ஊன்றுகோல் நீ!

July 22, 2010

உள்செய்

செய்யுள்:1

இண்டு இடுக்குகளில் ஒண்டி ஒதுங்கும்
வண்டி நெருக்கத்தில் மனசு புழுங்கும்
ஏசி காரிலும் ஏழை மனம் ஏங்கும்;
நடந்து வந்திருந்தால் கடந்து சென்றிருக்கலாமோ?

July 20, 2010

உள் கட

பூட்டிக் கிடக்கும் மனதைத் திறந்துவிடுவதற்கான சாவியை வைத்திருக்கின்றன சில கணங்கள். நேசம் பரிமாறிக்கொள்ளும் நேரங்கள், லயித்துக்கிடக்கும் இசை, இன்ன பிற இடங்களில் ஒரு மர்மக் கதவு தட்டப்பட்டுவிடுகிறது.

July 15, 2010

நண்பர்கள் இல்லாத அறையில்

..................................................................
வெற்றிடங்களை நிரப்பியிருக்கின்றன
நேசமும் நட்பும்.

July 14, 2010

நட்பில் தழும்பிய நிறைகுடம்



பாதி நிரம்பிய தண்ணீர் பாட்டிலை
குடிக்கக் கொடுத்தான் நண்பன் வேணு .

கூத்தாடிய குறைகுடுவையை நிரப்பியிருந்தது
ஒரு பரிசுத்தமான அன்பு.

July 13, 2010

தீதும் நன்றும்

பொதுக்கழிப்பிடங்களில் சிறுநீர் கழித்தபிறகு, கழிவுநீர்மீது காறி உமிழ்ந்துவிட்டு நகர்பவர்களைப்பார்த்திருக்கிறேன் ; அவர்களுள் ஒருவனாகவும் இருந்திருக்கிறேன் .தெறிக்கும் சிறுநீரில் ஒரு துளி நாவில் சுவைக்கப்பட்டதாய் ஒரு பிரம்மைச் சிந்தனையின் வினையாக்கமாய் இருக்கக்கூடுமோ அந்த உமிழ்தல்? ஒரு நுண்கணத்தில், பிரக்ஞைக்குப் புலப்படாமல் உருவாகி, செயலாகிய இந்தச் சிந்தனையின் அருவருப்பு திடுக்கிடலில் உறையச்செய்கிறது.

July 08, 2010

படிப்பிதம்

அழுத்திப் பூசிய அழுக்கும், பராமரிப்பில்லாத சரீரமாய் இவர்களைப்  பார்த்திருக்கிறேன் . பொதுவான இடங்களில், பிரத்யேகமான உலகங்களை சிருஷ்டித்துக்கொண்டு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருப்பார்கள். பிரபஞ்சப் பெரும்புதிரை விடுவிக்கும் தீவிர சிந்தனையோடு வெறித்துப் பார்த்தபடியும், எள்ளி நகையாட ஒரு பெருங்கோமாளிஎன உலகத்தைப் பார்த்து அசட்டுத்தனமாய் சிரித்தபடியும் பார்வையில் பதியும் இவர்கள், மக்கள் தொகையில் விடுபட்ட எண்ணிக்கைகளோ . விதிஎனத் தீர்மானிக்கப்பட்ட கணத்தில் கவனந்தவறி, தடுக்கி விழுந்தவர்களோ ; விழுந்த பின் எழமுடியாமல் நின்றுவிட்டவர்களோ.

July 07, 2010

கண் காட்சி



இதழ்கள் உரசி
இடைகள் அணைத்து
மார்பு முட்டி களித்திருக்கும்
நகரக் காதல்.


July 06, 2010

நண்பர்களைப் பிரிந்த இரவு




மூடிய புத்தகத்தின் மௌனம்
போர்த்திய அறையில்
சிநேஹித்திருந்த தருணங்களை
மீட்டிக் கொண்டிருக்கிறேன்.

உச்சுக்கொட்டி கேட்கிறது
சுவர்க் கடிகாரம்.

July 02, 2010

ரயில் சினேஹம்



உன்னோடு
நான் செய்த உறவு

July 01, 2010

பழம்பெரும் பழங்கள்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடிகளைக் கெடுத்தன சில பழங்கள். ஏதேன் தோட்டத்தில் அம்மணமாய்த் திரிந்து கொண்டிருந்த ஏவாளை அம்மாவாக்கியது ஒரு ஆப்பிள். கருவுற்று, குழந்தைகள் ஈன்று சீரழிந்த கதைகள் தேவாலயங்களின் ஞாயிற்றுக்கிழமை
நற்செய்திகள். ஹவ்வா என்று பெயர் மட்டும்தான் வேறு. மற்றபடி திருக்குரானின் ஹதீத்துகளில் அதே பழம். அதே பிரச்சனைகள். சிவனேன்னு இருந்த பரமேஸ்வரன்- பார்வதி குடும்பத்தில் மாம்பழம் ஒன்று குண்டு வைத்தது. எலியோடும் மயிலோடும் விளையாடிக்கொண்டிருந்த வினாயக-முருகன் பிரதர்ஸ் எலியும் பூனையுமாய் முறைத்துக்கொண்ட திருவிளையாடல்கள் சினிமா பிரசித்தம். எட்டாத உயரத்தில் பழுத்திருந்த திராட்சைப் பழங்கள் இன்று வரைக்கும் நரிவம்சத்தினருக்கு புளிக்கும்பழம் தான்.

சனிக்கிழமை இரவுகள்

சனிக்கிழமை இரவுகள் சுவாரசியமானவை. வாரத்துவக்கத்திற்கான படபடப்பு முன்னோட்டம் ஞாயிறு போல் சனியிரவில் இருப்பதில்லை. மூச்சிரைத்தோடும் வருடத்தின் வாரங்களெல்லாம் சனிக்கிழமை இரவுகளில் சாவகாசமாய் இளைப்பாறும். தேக அயர்ச்சியும் உள்ளத்துளைச்சலும் சனி இரவின் தோள்களில் தாராளமாய் இறக்கிவைக்கப்படுகின்றன. சனிக்கிழமை இரவென்பது தோழமை. ஒரு வாரத்திற்கு தேவையான அன்பு சனியிரவுகளில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டுவிடுகிறது. நேசிப்பிற்குரியவர்க்கான பாசத்தையும் நேரத்தையும் ஒதுக்கமுடியாத குடும்பஸ்த்தர்க்கு சனிக்கிழமை இரவென்பது பகிர்வுவெளி.

தனித்திருப்பவனுக்கு எல்லா இரவுகளுமே விசேஷமானவை . இரவு என்பது அவனுக்கு தேவதையின் ஆசிர்வாதம். கருஞ்சிறகுகளில் சுமந்தபடியே இரவுதேவதை தனது அந்தரங்க அற்புதங்களை அவனுக்கு தினந்தோறும் ஆசிர்வாதம் செய்துவிடுகிறாள். கோலாகலமாகவே துவங்குகின்றது ஒரு மாநகரத்தின் இரவு. ஒரு குழந்தை அண்ணாந்து வாய் பிளப்பதற்கான மாயாஜாலங்களை அது வாரியிறைத்து விடுகிறது. இங்கே இரவு எனப்படுவது சூரியன் இல்லாத வெளிச்சம். ஒற்றைக்கால் ரெட்டைக்கண்களோடு பயமுறுத்தும் அரக்கனாய் நெடிதுயர்ந்த சோடியம் விளக்குகளும் பரபரப்பு குறையாத சாலைகளும் மாநகரின் ராத்திரிகளை விடிய விடிய விழித்திருக்க வைத்துவிடுகின்றன.

எதையோ துரத்தியபடிதான் விரைகின்றன எல்லா வாகனங்களும். அசுரவேக வாகனங்களெல்லாம் விலங்குகளை ஒத்தே இருக்கின்றன.ஒரு மலைப்பாம்பென ஊர்ந்து வருகிறது பாலத்தின் மேல் பறக்கும் ரயில். ஒற்றைக்கண் மட்டுமே கொண்ட காட்டுவண்டென பறக்கின்றன இரு சக்கர வண்டிகள். முன்பக்கம் மூக்குபோல் புடைத்த ஆட்டோ ஓணாயென ஓடி வருகுது . சிங்கமோ புலியோஎன பீதிகிளப்புகிறது லாரி. சற்றே நீளமான கார்கள் காட்டெருமைகள் போலவே வருகின்றன. ஒடிசலான தேகமுடய சைக்கிள் மட்டும் சாதுவான எறும்புபோல ஊர்ந்து வருகிறது. முட்டைக்கண்ணும் பரட்டைத்தலையும் மயிர் மழிக்காத முகமுமாய் அந்த சைக்கிளோட்டிதான் எரும்புமேல் எமனாய் பயமுறுத்துகின்றான்.

நாம் வடிவமைத்த வாகனங்கள் எல்லாம் விலங்கினங்களையே நினைவூட்டுகின்றன. முதுகுத்தண்டு நிமிர்ந்து வாலுதிர்த்து வெகு தொலைவு கடந்து வந்திருந்தாலும் மனிதனின் ஞாபகக் கண்ணாடி எங்கும் விலங்கின் பிம்பங்கள். முற்றிலுமாய் மிருகத்தின் அடையாளங்களை மனிதன் துடைத்தெறிவது எக்காலம்? விலங்கின் எச்சங்கள் எல்லாம் களைந்த மனிதன் என்னவாயிருப்பான்? கடவுள் எனச்சொல்லப்பட்டது மனிதனின் அடுத்த பரிணாமமா அல்லது ஞானமுற்றவரின் அனுபவமாய் அறியப்பட்டது போல் உயிருற்பத்தி ஆகும் ஊற்றுக்கண்ணா?

தடம் புரண்ட சிந்தனைகள் விடைகாணா முற்றுச்சுவரின் மீது முட்டிக்கொண்டு நின்றதில் தலைகனத்து புரண்டுபடுத்தேன். என் படுக்கையருகே என்னைப் போலவே ஒரு கரிய உருவம் உருண்டது; விக்கித்து விழித்தேன். என்னிழல்தான் என ஆறறிவு உறுத்தியபோதும் இருதயத்தின் படபடப்பு இன்னமும் குறைந்தபாடில்லை.

மண் துகள்களோடு சிகரெட் சாம்பல்
கசங்கிய துணிகள் தாறுமாறாய் சாமான்கள்
பகலில் திருடன் நுழைந்திருப்பனோ? 


கதவு வழியாய் நுழைந்த காற்றில்
ஈரப்பசையோடு தாவர வாசனை.
கோடை மழை பெய்திருக்கக்கூடும். 

எங்கே? எப்போது? 

ஜன்னலுக்கு வெளியே-
வேட்டைக்கு செல்லும் வேகத்தில் வாகனங்கள்.
ஒன்றிரெண்டு இரையாகவும் நேரலாம்.

நாட்டு மரங்களை பிடுங்கி
நடப்பட்ட அலங்காரச் செடிகளுக்கு
கோடையிலும் சிரத்தையோடு நீர் பாய்ச்சும்
கார்பரேஷன் லாரி.

பின்னிரவின் பறக்கும் ரயிலில்
காலியாகவே இருக்கின்றன
பெரும்பான்மையான இருக்கைகள். 


இருளின் வெளிச்சமின்மையும் மீறி பளீரென்றிருந்தது
அவளின் முகமும் புன்னகையும். 


இளஞ்சூட்டில் தேநீர் குடித்தால் நன்றாய்த்தானிருக்கும். 

கட்டாய கடமைகள் ஏதும் நாளைக்கில்லை.
சற்று நீளமாகவே கழிகின்றது சனிக்கிழமை பின்னிரவு.