July 31, 2010

விழிமூடாதிருந்தால்



நெகிழ்ந்துபோய் நாயகன் நின்றிருந்தான்.

படியேறி வந்துகொண்டிருந்தது நாயொன்று.

நெருங்கி வந்ததும்-

நாயின் கண்களில்
ஒரு நுண்மாறுதலை கவனித்ததில்
வெளிறிவிட்டது நாயகன் முகம்.

விபரீதம் நிகழப் போகிறது
என்ற அனுமானத்தில்
விழிகளை இறுக்கி மூடிக்கொண்டேன்.

ஆர்வம் மேலிட
வீரம் வரவழைத்து
வெகு பிரயத்தனத்தில்
விழி திறந்தேன்.

அறைக்குள் ஊடுருவிய வெளிச்சத்தில்
கண்கள் கூசின.

விரையும் வாகன இரைச்சல்கள்
செவிப்பறைகளை அறைந்தன.