November 27, 2013

அப்புக்குட்டியும் குட்டித்தங்கமும்

புதுமணத் தம்பதி கதை

தலைமுனை இழுத்தால் காலைக் கடிக்கிறது.
காலைக் காப்பாற்றினால் கடிபடுது என்காது.
கொசுக்கள் களவாடிய தூக்கம்
தொலைந்துபோன நடுநிசியில்
குட்டைப்போர்வையை சுருட்டியெறிந்துவிட்டு
சுறுசுறுப்பாய் உட்கார்ந்தபடி
புதுமணத் தம்பதிபற்றி
சுடச்சுடக் கதைசொல்கிறேன்.
கவனமாய்க் கேளுங்கள்
கனவான்களே கனவாட்டிகளே!

November 06, 2013

கோட்டைவிட்ட காவலாளி

மருத்துவமனை வளாகத்தில்
ரோந்து போகிறார்
இரவுநேரக் காவலாளி.

மழைக்குப் பிந்தைய இரவு

க்ரோக் க்ரோக்
க்ரோக் க்ரோக்

October 08, 2013

கோடைகால மதியப் பொழுதுகள்

மதியம் உறங்கி எழுந்தால்
பெரும்பாரத்தொடு  மனம் கனத்துவிடுகிறது.

போர்வைக்குள்

மேற்புறத்து மேடுபள்ளங்களைக் கொண்டு
யூகிக்கமுடியவில்லை.

புறப்பாட்டின் துயரப்பாடு

பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது.
பணியிடத்தில் விடுப்பு சொல்லியாகிவிட்டது.

August 23, 2013

உயரத்தில் என் நிழல்

நகரும் வாகனங்களுக்கு அடியில்
நழுவும் சாலையின் ஓரத்தில்

காற்றிசைத்த குறிப்புகள்

ஒன்று

காற்றோடையில் மிதந்து வரும் மணியோசைகள்
செவியின் ஜன்னல்களை தட்டிச் செல்கின்றன.

குதிரை ஒரு வினோத விலங்கு

முன்புறமோ அல்லது பின்புறமோ
அனாயசமாக ஒருகட்டம் தாண்டிவிடும்.
இடம் அல்லது வலமாக

January 08, 2013

ஓரிலையும் அசையாத மரத்தினடியில் - கவிதைத் தொகுப்பு

எனது முதல் கவிதைத் தொகுப்பு,  'ஓரிலையும் அசையாத மரத்தினடியில்', உயிர்மை பிரசுரமாக வெளியாகி உள்ளது. பள்ளிக்காலந் தொட்டு, எழுதியவற்றையெல்லாம் ஆஹா ஓஹோ என்று பாராட்டும் என் அம்மா, நூலகத்தில் இருந்து கவிதை நூல்களை வாசிக்கத் தந்து, எனது கவிதைகளை வாசித்து ஊக்கப்படுத்திய பௌதிக ஆசிரியர்கள், டைரியில் எழுதிக் கொண்டிருந்தவனை வலைப் பக்கத்தில் எழுதச் சொல்லி, தொடர்ந்து தொகுப்பாக வெளியிட அறிவுறுத்தி, பாதை தவறும் பொழுதுகளில் திசை காட்டும் நண்பன் வசந்த், உடனிருந்து உற்சாகப்படுத்திய நண்பர்கள் நாகராஜ், வேணு, பசுபதி மற்றும் 'துரோணா' விஷால் , நல்ல கவிதைகளை மனந் திறந்து பாராட்டியும் தொகுப்பாக்கவும் ஊக்குவித்த வல்லினம் நவீன், கவிதைகளை வெளியிட்டு அங்கீகரித்த திண்ணை,உயிரோசை,காட்சி, சொல்வனம், மற்றும் வல்லினம் இதழ்கள், நினைத்திருந்த வடிவத்தில் புத்தகத்தை வெளிக்கொணர்ந்த உயிர்மை திரு.மனுஷ்ய புத்திரன் மற்றும் உயிர்மை ஊழியர்கள் ஆகியோரை நன்றியோடும் நெகிழ்ச்சியோடும் இத்தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன்.தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள், இத்தளத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றன.