November 06, 2013

மழைக்குப் பிந்தைய இரவு

க்ரோக் க்ரோக்
க்ரோக் க்ரோக்

இன்னுமென்ன சத்தம்?
ஊரைக்கூட்டி
உரக்கக் கத்தினாலும்
விழவா போகிறது காதுகளில் ?

இன்றைக்கு இவ்வளவுதான்
பேஞ்சு ஓஞ்சுவிட்டதாம் வானம்.

போய்த் தூங்கு போ
நானும் தூங்கணும்.

( நன்றி : சொல்வனம் )