ஓரிலையும்
அசையாத மரத்தினடியில் அமர்ந்தபடி, கவிஞர்.ராஜா எழுதிய அல்லது
எழுதியவற்றுள் 102 கவிதைகள், ஓர் தொகுப்பாக, உயிர்மை பதிப்பகத்தின்மூலம்
வெளியாகியுள்ளன .எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் ; தலைப்பிலிருந்தே
துவங்கலாம். ஓரிலையும் அசையாத மரம் - காற்றே இல்லையென்றால் சாத்தியம்.
எங்கிருக்கிறது அது? ஒருவேளை மரச்சிலையோ? என்ன சொல்ல வருகிறார்?
கவிராயருக்கே வெளிச்சம். இன்னும் ஆழ அகலத்தில், தலைப்பை ஆராயப் புகுந்தால்,
மண்டைக்கு மேற்பரப்பில் மண்டிக்கிடக்கும் விளைச்சலில் ஒருபயிரும்
மிஞ்சாது என்ற அக்கறையின்பாற்பட்டு , கவிதைக்குள் செல்லலாம் இனி.