June 30, 2010

விழியருகில் வானம்


இழுத்து
போர்த்திக்கொள்ளமுடியாத தூரத்தில்
விரிந்திருக்கிறது வானம்.

தூரங்களைக் கறைக்கும் கற்பனைகள்
தோற்றுப்போய்த் தூங்கிவிடும் இரவுகளில்

என்மேல் கவிழ்ந்து
என்னை இறுக்கி
அணைத்துக் கொண்டுவிடுகிறது.