April 02, 2015

நிழலின் சொகுசு

பிரதான சாலையோடு சங்கமிக்கும் தடம் 
வழியே வரும் சொகுசுக் கார்
முனையில் நின்று 
மூக்கு நீட்டி எட்டிப் பார்க்கும் 

தூர்தர்ஷனின் மகாபாரத வில் 
தொடுத்த கணைச் சரங்களாய் 
விசையுற்று ஏகும் வாகனங்கள்

ஒருகண சிறுவெளி கிடைத்ததும் 
அதில் உடம்பை நுழைத்து
வெறிவேக வேங்கைகள் ஸ்தம்பிக்க
ஒய்யாரமாய் வளைத்து  
சல்லென்று முந்திச் செல்லும் நரியின் மீது 
உறுமும் விழிகளின்  உஷ்ணம் குவிகையில் 

சொகுசுக் காரின் நிழலோடு ஒண்டிக்கொண்டு 
சௌகரியமாய் சாலையில் கலந்திருக்கும்  
என்பைக்.