March 25, 2015

காணாதது

பெருமாள் கோயில் 
சந்துத் தெருவில் 

ஓடுகள் வேய்ந்த 
சிறுவீட்டுச் சுவர்மீது 

உருட்டித் தட்டிய 
வரட்டிகளுக்கு அருகே 

முருங்கை மரக் 
காற்று வீசும் 
திண்ணையின் மேல் 

உடகார்ந்த வாறே 
உறங்கிப் போகும் 
கிழவியின் முகத்தை

சுற்றி மொய்க்கும் 
ஈக்களுக்குத் தெரியுமா 

மூடிய இமைகளுக்குப் பின்னால் 
ஓடும் காட்சிகள்