பெருமாள் கோயில்
சந்துத் தெருவில்
ஓடுகள் வேய்ந்த
சிறுவீட்டுச் சுவர்மீது
உருட்டித் தட்டிய
வரட்டிகளுக்கு அருகே
முருங்கை மரக்
காற்று வீசும்
திண்ணையின் மேல்
உடகார்ந்த வாறே
உறங்கிப் போகும்
கிழவியின் முகத்தை
சுற்றி மொய்க்கும்
ஈக்களுக்குத் தெரியுமா
மூடிய இமைகளுக்குப் பின்னால்
ஓடும் காட்சிகள்