August 16, 2011

குறைகுடக் கூத்துகள்

அது
ஞாபகமிருந்தது 
அவ்வளவுதானே
பூர்வ ஜென்மங்கள்
ஞாபகத்திற்கு வந்துவிடவில்லையே

அதை
அறிந்திருந்தாய்
அவ்வளவே
அறியவொண்ணாததை 
அறிந்திருக்கவில்லையே

இத்தனை
இரைச்சல்
தேவைதானா

ஆர்ப்பரித்து
பறைசாற்றி
கவனம் ஈர்த்து
கனம் கூடியதே
அன்றி
வேறென்ன கூடி வந்தது

இவ்வளவு சொல்லியும்
புத்தியில் உறைக்காமல்
சொன்னதையே 
அடுக்கடுக்காய் 
எழுதிக்கொண்டிருப்பவனை
புத்தர்கள்தாம்
கரைசேர்க்க வேண்டும்.