July 18, 2011

கல்சுவை

கல்லை
சப்பிக்கொண்டிருந்தவனிடம்
பசிக்கிறதோ என்றேன்
பொடியாகும்வரை
வாயில் போட்டு மெள்ளும்படி
அவர் தந்துவிட்டு போனதாக சொன்னான்
பொடிபட்டதா என்று கேட்டேன்
கரையட்டும்
என்று காத்திருப்பதாக சொன்னான்.