October 04, 2014

விடைபெற்ற கோடை

வெக்கையைக் கசக்கிப் பிழிந்துவிட்டு 
வெறும் வெளிச்சத்தை உலர்த்துகிறது வானம்

நீண்ட நாள் ஜுரம் வடிந்து 
குளிர்ந்து கிடக்கிறது மண்
கோடையை
ஏதோவொரு தூரதேசத்திற்கு வழியனுப்பி ஆயிற்று
கொடுங்கோல்தான் 
கொடூரக் கொடுமைதான் என்றாலும்
ஊர்முழுக்க 
சோகமாய் ஒரு சோம்பல் பரவியிருக்கிறது.