Showing posts with label தூதொடு வந்த மழை. Show all posts
Showing posts with label தூதொடு வந்த மழை. Show all posts

September 30, 2010

தூதொடு வந்த மழை


மூச்சு முட்ட
நான் இயற்றிய காதலை
மூட்டை கட்டி அனுப்பி வைக்கிறேன்;

கப்பலாய் நனைந்தே
உன் கரை சேரட்டும்.

September 15, 2010

தூதொடு வந்த மழை


உன்னை
தீண்டித் தழுவிய தேகத்தில்
இன்னும் ஒட்டியிருக்கிறது
மலர்ந்த பெண் வாசனை

August 28, 2010

தூதொடு வந்த மழை




ஆநிரை இரையும்  ஒலிகேட்டு- மலையிடை
மேவும் மேகத் துளிபட்டு- துடியிடை
மயிலும் அகவ -ஒளிகெட்டு வடிவிடை
அழகும் துயில் எழும்.

August 24, 2010

தூதொடு வந்த மழை



*மிகுவெப்பமோ குறைஅழுத்தமோ
மழை பெய்வதற்கும்
காரண காரியங்கள் உண்டு.

August 15, 2010

தூதொடு வந்த மழை










வழியெங்கும்
வழிந்தோடுகிறது மழை
வேடிக்கைபார்ப்போர்
யாருமின்றி...